சினேகா, த்ரிஷா, ஸ்ரேயாவுக்கு தெலுங்கு நடிகர் சங்கம் நோட்டீஸ்!

15 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தி உறுப்பினராகாவிட்டால், தெலுங்குப் படங்களில் நடிக்க முடியாது என நடிகைகள் சினேகா, த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்டோருக்கு தெலுங்கு நடிகர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று கடந்த வாரம் சென்னையில் கூடிய நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அக்டோபர் 30-ந்தேதிக்குள் உறுப்பினராக கெடு விதிக்கப்பட்டு உள்ளது. இது போல் தெலுங்கு நடிகர் சங்கமும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பளம் அதிகம் என்பதால் இந்தி, தமிழ், மலையாள நடிகைகள் பலர் தெலுங்கு படங்களில் நடிக்கின்றனர். ஆனால் அவர்கள் தெலுங்கு நடிகர்கள் சங்கத்தில் இதுவரை உறுப்பினராகவில்லை இதையடுத்து உறுப்பினராகாத நடிகைகள் பட்டியலை தெலுங்கு நடிகர் சங்கம் தயார் செய்தது.

அவர்களுக்கு இன்னும் 15 நாட்களில் உறுப்பினராக வேண்டும் என்று கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. நடிகைகள் த்ரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, இலியானா, டாப்சி, சினேகா, தமன்னா, நித்யாமேனன் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இவர்கள் தமிழ் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகி விட்டனர். ஆனால் தெலுங்கில் இன்னும் உறுப்பினர் ஆகவில்லையாம். 15 நாட்களுக்குள் உறுப்பினராகாவிட்டால் தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments: