ஃபேஷன் ஷோக்களுக்கு பட்டுப்புடவையில் வரும் ஸ்நேகா!

நடிகை ஸ்நேகா ஃபேஷன் ஷோக்களுக்கு பட்டுப்புடவையில் வந்து அசத்துகிறாராம். அதற்காக புதுப் புது டிசைன்களில் பட்டுப்புடவைகள் வாங்கிக் குவிக்கிறாராம்.

நடிகை ஸ்நேகா ஃபேஷன் ஷோக்களில் அதிகம் கலந்து கொள்கிறார். ஃபேஷன் ஷோ என்றால் மாடர்ன் டிரஸ்ஸில் வருபவர்களுக்கு மத்தியில் ஸ்நேகா பட்டுப்புடவையில் சென்று அசத்துகிறார். அதற்காக வித, விதமாக பட்டுப்புடவைகள் வாங்கிக் குவிக்கிறாராம்.

அது காஸ்ட்லியாக இருந்தாலும் சரி, பிடித்திருந்தால், விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிவிடுகிறார். ஒவ்வொரு ஷோவுக்கும் ஒரு டிசைன் புடவையில் வந்து கலக்குகிறார்.

தனக்கு எது கச்சிதம் என்பதை புரிந்து கொண்டு அதையே விரும்பி அணிகிறார் ஸ்நேகா.

தப்பேயில்லை...!

No comments: