பாலிவுட் படங்களில் நடிக்க ஆசை: பாரிஸ் ஹில்டன்

மும்பை: பாரிஸ் ஹில்டனுக்கு பாலிவுட் படங்களில் நடிக்கை ஆசையாக இருக்கிறதாம். நல்ல கதைக்காக காத்திருக்கிறாராம்.

நடிகை, சோஷியலைட், கோடீஸ்வரி, தொழிலதிபர், மாடல் அழகி என பல அவதாரங்களைக் கொண்டவர் பாரிஸ் ஹில்டன். தனது கைப்பைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்த 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

மும்பையில் தங்கியுள்ள அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்புகள் வரத் தான் செய்கிறது. எனக்கும் பாலிவுட்டில் நடிக்க ஆசையாக உள்ளது. ஆனால் நல்ல கதை இன்னும் கிடைக்கவில்லை. அதற்காகத் தான் காத்திருக்கிறேன் என்றார்.

நீங்கள் நடத்தும் பெஸ்ட் பிரண்ட்ஸ் பார்எவர் ரியாலிட்டி ஷோவை இந்தியாவில் நடத்தலாமே என்று கேட்டதற்கு, எனக்கும் ஆசை தான். ஆனால் நான் தற்போது பிசியாக உள்ளேன் என்றார்.

பெஸ்ட் பிரண்ட்ஸ் பார்எவர் ரியாலிட்டி ஷோ கடந்த 2008-ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கப்பட்டது. பின்னர் அது ஹிட்டானவுடன் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் துவங்கப்பட்டது.

காபி வித் கரண் நிகழ்ச்சியில் பாரிஸ் கலந்துகொள்ளப்போகிறார் என்றும், பாலிவுட் நட்சத்திரங்கள் அவருக்கு பார்ட்டி கொடுக்கப்போகிறார்ள் என்றும் பேசப்படுவது பற்றி கேட்டதற்கு,

இது எல்லாம் வதந்திகள். நான் இங்கு வியாபார விஷயமாகவும், எனது ரசிகர்களை சந்திக்கவும் தான் வந்துள்ளேன்.

பின்னர் பாரிஸ் தனது தயாரிப்பான கைப்பைகள், அழங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்தினார்.

No comments: